சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டில் 
தற்கொலை குண்டுத் தாக்குதல்
- சர்வதேச பயங்கரவாத அமைப்பான IS பொறுப்பேற்றது

சாய்ந்தமருதில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை சர்வதேச பயங்கரவாத அமைப்பான .எஸ் பொறுப்பேற்றுள்ளது.

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்ட வீடொன்றில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை .எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் (AMAQ ) வெளியிட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி தொடர் தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை AMAQ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த தற்கொலை தாக்குதல் காரணமாக 15 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 தற்கொலை குண்டுதாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top