தேசிய தவ்ஹித் ஜமாத்தின் கொழும்பு தலைவர் கைது
அடிப்படைவாத
இஸ்லாமிய அமைப்பு
தேசிய தவ்ஹித்
ஜமாத் அமைப்பின்
கொழும்பு மாவட்ட
தலைவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு
வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள மாடி வீட்டுத்
தொகுதியில் இந்த நபரை விசேட பொலிஸ்
குழு கைது
செய்துள்ளது.
38 வயதான
மொஹமட் பவாஸ்
என்ற நபரே
இன்று கைது
செய்யப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
சந்தேக
நபர் கைது
செய்யப்படும் போது அவரிடம் இருந்த தவ்ஹித்
ஜமாத் அமைப்புக்குரிய
சுவரொட்டிகள், அமைப்பின் உபதேசங்கள் அடங்கிய பென்
ட்ரைவ்கள், காணொளிகள், செல்போன்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக
நபர் குறித்து
கிடைத்த தகவல்
ஒன்றை அடுத்து
மேல் மாகாண
புலனாய்வு பிரிவினர்
மற்றும் வாழைத்தோட்டம்
பொலிஸார் இணைந்து
இன்று மதியம்
மேற்கொண்ட தேடுதலில்
அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.