கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார் பூஜித
– பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரத்ன
பதவியில்
இருந்து விலக
மறுத்த பொலிஸ் மா அதிபர் பூஜித
ஜயசுந்தர, கட்டாய
விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். பொலிஸ்
மா அதிபரை
கட்டாய விடுமுறையில்
செல்லுமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பணித்துள்ளது.
கடந்த
21ஆம் திகதி நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து
பொலிஸ், மா அதிபர் பூஜித
ஜயசுந்தரவை பதவி விலகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
எனினும்,
அவர் ஜனாதிபதியின்
உத்தரவுக்குப் பணிய மறுத்து வந்த நிலையிலேயே
அவர் கட்டாய
விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
அதேவேளை,
பதில் பொலிஸ் மா அதிபராக, சந்தன விக்ரமரத்ன
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்
அத்துடன்,
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன்,
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும்
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.