பாதுகாப்புத் துறையில் உயர் பதவி வகித்தவர்களுடன்
மஹிந்த, கோத்தபாய சந்திப்பு
தனது
ஆட்சியின் போது
பாதுகாப்புத் துறையில் உயர் பதவி வகித்தவர்களை,
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று
சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதில்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய
ராஜபக்ச, முன்னாள்
இராணுவ தளபதி
தயா ரத்நாயக்க,
முன்னாள் பொலிஸ்மா
அதிபர் மஹிந்த
பாலசூரிய, முன்னாள்
இராணுவத் தளபதி,
முன்னாள் கடற்படைத்
தளபதி, முன்னாள்
விமானப்படை தளபதி உட்பட முக்கிய பிரமுகர்கள்
பங்கேற்றிருந்தனர்.
நாட்டின்
தற்போதைய பாதுகாப்பு
நிலவரம் குறித்து
இதன்போது விரிவாக
ஆராயப்பட்டுள்ளன. அத்துடன், தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது
.
மஹிந்த
அணியின் பங்காளி
கட்சிகளின் தலைவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.