புதிய பாதுகாப்புச் செயலாளராக
ஜெனரல் சாந்த கொட்டேகொட
புதிய
பாதுகாப்புச் செயலாளராக, முன்னாள் இராணுவத்
தளபதி ஜெனரல்
சாந்த கொட்டேகொட
நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர்,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவரை
இந்தப் பதவிக்கு
நியமித்துள்ளார்.
கடந்த
21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து,
பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி
விலகுமாறு ஜனாதிபதி
அறிவுறுத்தினார். இதையடுத்து அவர், பதவி விலகியிருந்தார்.
எனினும்,
புதிய பாதுகாப்புச்
செயலாளரை நியமனம்
செய்வதில் இழுபறிகள்
நிலவி வந்தன. இந்தப்
பதவிக்கு நியமிக்க
முற்பட்ட போது
பலரும் அதனை
ஏற்க மறுத்து
வந்தனர்.
இந்த
நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்
சாந்த கொட்டேகொட இன்று புதிய பாதுகாப்புச்
செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்
இராணுவத்தின்
17 ஆவது தளபதியாக,
2004 ஜூலை 1ஆம் திகதி தொடக்கம், 2005 டிசெம்பர் 05ஆம்
திகதி வரை பதவி வகித்திருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.