உலகிலேயே மிக உயரமான கட்டடத்தில்
இலங்கையின் தேசிய கொடி

இலங்கையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இலங்கையின் பல பகுதிகளிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களின் எட்டு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top