காலி, தங்கொதர
- மொரகொட பிரதேசத்தில்
மத பிரச்சாரங்கள் அடங்கிய
797 சீடிக்களுடன் இருவர் கைது
காலி,
தங்கொதர - மொரகொட
பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்து மத
பிரச்சாரங்கள் அடங்கிய 797 சீடிகளுடன் இரண்டு பேரை
பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
பொலிஸாரும்,
பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய சோதனையில்
பள்ளிவாசலின் பொருளாளரும், மற்றுமொரு நபருமே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
முஸ்லிம் பள்ளிவாசல்
தௌஹித் ஜமாத்
அமைப்பின் பிரதான
பிரச்சார நிலையம்
என்பதுடன், கைப்பற்றிய சீடிக்களில் இஸ்லாமிய அடிப்படைவாத
கருத்துக்கள் அடங்கி இருக்கின்றதா என்பது குறித்து
விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று
கைது செய்யப்பட்ட
இந்த சந்தேகநபர்கள்
இன்று காலி
நீதவான் முன்னிலையில்
ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.