தேசிய சந்தையில் தேங்காய்
விலையினை கட்டுப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
தற்போதைய
சூழ்நிலையில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கலாம்
என தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் தேசிய
தேங்காய் எண்ணெய்
உற்பத்திக்காக தேங்காய்களின் கேள்வியினை குறைப்பதன் மூலம்
தேசிய சந்தையில்
தேங்காய் விலை
அதிகரிப்பினை குறைத்து தேங்காய் பயிர்செய்கையாளர்களுக்கும், தேங்காய் பயிர்செய்கையுடன்
இணைந்த உற்பத்தியாளர்களுக்கும்
நன்மை பயக்கும்
வகையில் தேசிய
தேங்காய் விலையினை
நிலையான மட்டத்தில்
முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் குறுகிய கால
உபாய வழிகளை
முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதனடிப்படையில்,
நான்கு மாதங்களுக்கு
தேவையான கனிய
எண்ணெய் 40,000 மெட்ரிக் தொன்னினை மாத்திரம் இறக்குமதி
செய்வதற்கு ஏதுவான் முறையில் கீழ்வரும் வகையில்
விசேட பண்டங்களின்
வரியினை திருத்தம்
செய்வதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர்
நவீன் திசாநாயக்க
அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
• தேங்காய்
எண்ணெய் ஒரு
கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 150 ரூபாவிலிருந்து
130 ரூபா வரை
குறைத்தல்
• சுத்திகரிக்கப்படாத
தேங்காய் எண்ணெய்
ஒரு கிலோகிராமுக்கான
விசேட பண்டங்களின்
வரியினை 130 ரூபாவிலிருந்து 110 ரூபா வரை குறைத்தல்;
• சுத்திகரிக்கப்பட்ட
பாம் தேங்காய்
எண்ணெய் ஒரு
கிலோகிராமுக்கான விசேட பண்டங்களின் வரியினை 150 ரூபாவிலிருந்து
130 ரூபா வரை
குறைத்தல்;

0 comments:
Post a Comment