அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள

ரிசார்ட்டுக்குள் விரைந்து சென்றது ஆம்புலன்ஸ்!

தமிழகத்தில் அதிகரிக்கும் பதற்றம்!

தமிழகத்திலுள்ள கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகச் சென்றது. ஆம்புலன்ஸ் வருவதற்கு, 20 நிமிடங்களுக்கு முன்பாக மருத்துவக் குழுவும் சென்றது. ரிசார்ட் உள்ளே செல்ல செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இரண்டு முறை எம்.எல்.ஏக்களை சந்தித்துப் பேசினார். அவர்கள் சுதந்திரமாக உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில் அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள எம்.எல்.ஏக்களின் உண்மை நிலை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top