அம்பாறையில் பிரதியமைச்சர் ஹரீஸ்ஸை
தடுக்க முயன்ற சிங்கள மக்கள்!

அம்பாறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பார்வையிடச் சென்ற விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்எச்.எம்.எம் ஹரீஸ்ஸை அப்பகுதி சிங்கள மக்கள் சுற்றிவளைத்து தடுத்ததுடன், தம்முடன் உரையாடுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறை நகரில் தாக்குதலுக்கு இலக்கான பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களைப் பார்வையிடவும், பதற்ற நிலையைத் தணிப்பதற்காகவும் பிரதியமைச்சர் ஹரீஸ் இன்று காலை நேரில் சென்றிருந்தார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான பள்ளிவாசலை பார்வையிடச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென அவரைச் சூழ்ந்து கொண்ட மக்கள் அவரை தடுத்ததுடன், தம்முடன் உரையாடுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்புடனும், பிரதியமைச்சரின் பாதுகாவலர்கள்களின் பலத்த பிரயத்தனத்தின் பின் பிரதியமைச்சர் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top