அம்பாறை நகரில் இனரீதியான தாக்குதல்!
பள்ளிவாசல், கடைகள் சில சேதம்!!
அம்பாறை நகரில் இன்று(27) அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர் உணவாக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து உணவகத்துக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேவேளை அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீவைத்துவிட்டு, பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பள்ளிவாசலின் மதில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலிலிருந்த மக்கள் விரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது
தொலைபேசி அழைப்பின் மூலம் இரு வாகனங்களுக்கு வெளிப் பிரதேசத்திலிருந்து ஆட்களை வரவழைத்தே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.