ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின்
உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன
பதவி விலகல் செய்தி பொய்யானது
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, விடுத்திருந்த
அறிக்கையில் தெரிவிப்பு
ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் திருமதி. அமாரி விஜேவர்தன பதவி விலகியுள்ளார் என வெளியாகும் அறிக்கைகள் பிழையானவையாகும் என, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நேற்று (22) விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமாரி விஜேவர்தன தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வலம் வரும் அறிக்கைகள் பிழையானவையாகும். உயர் ஸ்தானிகர் விஜேவர்தன, அவரது விருப்பின் பேரில் 2018 மார்ச் 31 ஆம் திகதியன்று அவரது ஒப்பந்த காலத்தை முடிவுறுத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.