பொது மக்களுக்கான துரித நிவாரணங்கள் அடங்கிய
ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை
பிரதம
மந்திரி ரணில்
விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட குழுவின்
அறிக்கை நாளை
வெளியிடப்படவுள்ளது.
அமைச்சர்
சஜித் பிரேமதாஸ
தலைமையில் ஐக்கிய
தேசியக் கட்சியின்
சார்பாக குழு
நியமிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு வழங்கப்பட
வேண்டிய துரித
நிவாரணங்களை பட்டியலிடுவது குழுவின் நோக்கமாகும். சகல
தரப்புக்களினதும் பெறப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு அறிக்கை
தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் கட்சியை
மறுசீரமைப்பதற்கான யோசனைகளும் உள்ளடங்குகின்றன.
கட்சி மறுசீரமைப்புக் குழுவின்
அறிக்கை அடுத்த
வாரம் பிரதம
மந்திரியிடம் கையளிக்கப்படும். அந்தக் குழு அமைச்சர்
ருவன் விஜயவர்தன
தலைமையில் இயங்குகிறது.
தேசிய அரசாங்கத்தில் அங்கம்
வகிக்கும் ஐக்கிய
தேசியக் கட்சியின்
பின் வரிசை
உறுப்பினர்கள் சேவைகளை வழங்குவதில் எதிர்கொள்ளும் முட்டுக்
கட்டைகளை பட்டியலிடக்கூடிய
அறிக்கையொன்றும் வரையப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.