மாணவர், ஆசிரியருக்கு கணனி, டெப்
வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்
அரசு முடிவால் ஆசிரிய, மாணவர்கள் ஏமாற்றம்
கல்விப்
பொதுத் தராதர
உயர் தர
மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு டெப் சாதனங்கள் மற்றும் கணனிகள்
வழங்கும் அரசாங்கத்தின்
திட்டம் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று
20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை
கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்
காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின்
குறித்த தீர்மானம்
தொடர்பில், இன்று (20) இடம்பெற்ற அமைச்சரவையில் அதனை
தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கடந்த வரவு-செலவுத் திட்டத்தின்போது ஆசிரியர், மாணவர்களுக்கு கணனிகள் வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் 160 ஆயிரம் மாணவர்களுக்கும் கணனிகள் வழங்கப்படவிருந்தன.
இந்தத் திட்டத்துக்காக நான்கு பில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.