வியானா
ஆற்றில் வீழ்ந்த கார்!
மூவர்
மீட்பு, ஒருவர் மாயம்
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த
கார் ஒன்று மாபாகட வெவ,
17ஆம் கட்டைக்கு
அருகில் வியானா ஆற்றில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது
வாகனத்தில் பயணித்த மூவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவரை காணவில்லை எனவும் பொலிஸார்
கூறியுள்ளார்.
பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணம்
செய்து கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மஹியங்கனை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.