தங்கக் கடத்தல் தோல்வி
இருவர் கைது.!
சுமார் 2.35 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தினை சட்டவிரோதமான முறையில் இந்தியா - மும்பாய் நகரிற்கு கடத்த முயற்சித்த இருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளால் குறித்த இருவரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை மீட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மும்பை நோக்கி பயணிப்பதற்காக இன்று காலை விமானநிலையத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் உதவி ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.