ஈரானிய சபாநாயகர் குழு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு
ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி (Ali Larijani) உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (19) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதில் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவும் பங்குபற்றியிருந்தார்.
ஈரானிய சபாநாயகர் அலி லர்ஜானி உள்ளிட்ட 36 பேர் கொண்ட குழுவினர் இரு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (18) இரவு இலங்கை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.