பேருவளை கலங்கரை விளக்கத்தினை
பார்க்க சென்ற அண்ணனும் தங்கையும்
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பலி
பேருவளை கலங்கரை விளக்கத்தினை இன்று காலை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதான சகோதரனும் 24 வயதான அவரது தங்கையுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு கிரேன்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் குடும்ப
உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர்.
பேருவளைப் பிரதேசத்தில் சிறிய தீவு ஒன்றில் கலங்கரை விளக்கினைப் பார்வையிடச்
சென்றபோது அங்கிருந்த கற்பாறை ஒன்றில் உட்காந்துள்ளனர். இதன்போது எழும்பி வந்த
பாரிய அலையொன்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சகோதரனதும், சகோதரியினதும் உடல்கள் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
![]() |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.