அமைதி காக்குமாறு கோருகிறார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன



அனைத்து இலங்கையர்களையும் அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 140 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முப்படையினர், பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விசாரணைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் விசாரணை முன்னெடுக்கப்படும் கால கட்டத்தில் பொறுமை மற்றும் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top