குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள்
உள்ளிட்ட 188பேர் பலி – 469 பேர் காயம்
இலங்கையில்
இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 188 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கொழும்பில்
மூன்று ஆடம்பர விடுதிகளிலும், கொச்சிக்கடை
அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம்,
மட்டக்களப்பு சியோன் தேவாலயம், ஆகியவற்றில், ஒரே நேரத்தில்
இன்று காலை குண்டுகள் வெடித்தன. தெஹிவளை, தெமட்டகொடை
என்ற இடங்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்தச்
சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை,
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 469 என்று மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இன்றைய
குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள் என்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.