மருத்துவர் சேகு ஷியாப்தீன்
மொஹமட் ஷாஃபி
தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள
முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 06 பேர் கொண்ட
விசாரணை குழு நியமனம்
குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள
முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு மருத்துவ நிபுணர் அனில் சமரநாயக்க தலைமையில் 06 பேர்
கொண்ட விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக சேவை உத்தியோகத்தர் எல்.ஏ. பஸ்நாயக்க, ஓய்வுபெற்ற
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க, மகப்பேற்று
விசேட வைத்திய நிபுணர் யூ.டி.பி.ரத்னசிறி, சமூக விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ கொடகந்தகே, விசாரணை
அதிக◌ாரி எஸ்.ஐ. குணவர்தன ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.
சுகாதார அமைச்சின் செயலாளர் வசன்த்த பெரேரா விசாரணை குழுவை
நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை ஒரு மாத காலப்
பகுதியில் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு
அமைச்சின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.