“பௌத்த பின்லாடன்”
என அழைக்கப்படும்
அசின் விராதிற்கு
பிடிவிராந்து!
ஞானசாரரின் நெருங்கிய
நண்பராம்!
மியன்மாரின்
பின்லாடன் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பௌத்தமதகுரு அசின் விராதிற்கு எதிராக
மியன்மார் பொலிஸார் பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர்.
அசின்
விராதிற்கு எதிராக தேசதுரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பொலிஸார் அவர்
அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை தூண்ட முயன்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
அசின்
விராதுவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் அவர் தற்போது
எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
அசின்
விராது கலகொட அத்தே ஞானசார தேரரின் மிக நெருங்கிய நண்பராவார்.
இவர்
மியன்மாரில் சிறுபான்மை முஸ்லிம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்டும் நடவடிக்கையை
ஆரம்பித்தார்.
புத்த
மதம் அமைதியானதுதான். ஆனால், அதற்காக நாய்களோடு உறங்க முடியாது என்று புத்த மத துறவி கூறியதுதான் மியான்மரில்
நடந்த கலவரத்திற்கு அடிப்படை காரணம்
அசின்
விராது முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு தொடர்ந்து
பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார் என்பதுடன் ரோகிங்யா முஸ்லிம்களை சட்டவிரோத
குடியேற்றவாசிகள் எனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.