ஒவ்வொரு குடும்பத்தினரும்
3 பிள்ளைகளுக்கு மேல்
பெற்றுக்கொள்ள வேண்டும்
நாட்டிலுள்ள பௌத்த மக்களுக்கு
நெல்லிகல தேரர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!



இலங்கையிலுள்ள பௌத்த மக்களின் இனப் பரப்பலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லிகல தர்மரத்ன தேரர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு பௌத்த குடும்பத்தினரும் 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் சனத்தொகை வீழ்ச்சி அடையும், இரண்டு பெற்றுக்கொண்டால் சாதாரண நிலையை அடையும், மூன்று 3 பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் சனத்தொகை வளர்ச்சி அடையும் என தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் சனத்தொகையை கட்டுப்படுத்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதற்காக எந்தவொரு சட்டமும் இயற்றப்பட மாட்டாது. அவ்வாறான எந்த சட்டமும் கொண்டு வரவிட்டாலும் நாம் தோல்வி அடையக் கூடாது.

நாம் சிறுபான்மை இனத்தின் சனத்தொகை அதிகரிப்பதாக எண்ணுவதில் பயனில்லை. பௌத்த மததத்தின் சனத்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top