சாய்ந்தமருதில் காணாமல் போன
3 மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர்
சாய்ந்தமருதிலிருந்து
மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 3
மீனவர்களும் 4 நாட்களின் பின்னர் கரை திரும்பியுள்ளனர்.
கடந்த 26 ஆம்
திகதி சாய்ந்தமருது நடுத்துறைக் கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக
சென்ற குறித்த 3
மீனவர்களும் காணாமல் போயிருந்தனர்.
இவர்களை தேடிச் சென்ற ஏனைய மீனவர்கள், பொத்துவில்
கடற்பரப்பிலிருந்து சுமார் 15 மணிநேர தூரத்திலுள்ள பொத்தான பிரதேச எல்லையில் குறித்த மீனவர்கள்
மூவரையும் நேற்று (29) கண்டுபிடித்தனர்.
இவர்கள்
பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
எம்.எம்.
அமீர் அலி, எம்.அன்சார், எம்.எஸ்.நாஸர் ஆகிய மீனவர்களே காணாமல் போயிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.