தொழிநுட்ப கோளாறு காரணமாக
பொலன்னறுவை - ஹபரணை வீதியில்
இடம்பெற்ற பயங்கர விபத்து!
பொலன்னறுவை - ஹபரணை வீதியின் கிரிதலே பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற
பாரவூர்தி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று வீதியை விட்டு விலகி
அருகில் இருந்த மதகில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.
குறித்த பாரவூர்தியின் சாரதியே இந்த விபத்தில ்படுகாயமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
பாரவூர்தியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக சாரதியால்
பாரவூர்தியை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து
இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.