புத்தர் சிலைக்கு
சேதம் விளைவிப்பு
ஹம்பாந்தோட்டையில்
சம்பவம்
ஹம்பாந்தோட்டை
ரூவன்புர உபரத்ன
பௌத்த மத்திய
நிலையத்துக்கு முன்பாவிருந்த மூன்று அடி உயரமான
புத்தர் சிலைக்கு,
நேற்று (30) இரவு, விஷமிகள் சேதம் விளைவித்துள்ளதாக, மத்திய நிலையத்தின் அதிகாரி, பொலிஸில்
முறைப்பாடு செய்துள்ளார்.
புத்தர் சிலையானது இரண்டாக
உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
3 அடி
உயரத்திலான புத்தர் சிலையை நேற்று மாலை
அடையாளம் தெரியாத
நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த
சம்பவம் குறித்து
குறித்த பௌத்த
நிலையத்திலுள்ள தேரரினால் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேதப்படுத்தியமை
தொடர்பில் ஹம்பாந்தோட்டை
பொலிஸ் தலைமையகத்தினால்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாரால்
என்ன நோக்கத்திற்காக
சிலைகள் உடைக்கப்பட்டன
என்பது தொடர்பில்
இன்னமும் தகவல்
வெளியாகியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது
தொடர்பில் தீவிர
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த
சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்தில் பொலிஸ் மற்றும்
இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.