குருநாகல் மருத்துவருக்கு எதிராக
எந்த குற்றச்சாட்டும் இல்லை
மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவிப்பு



கைது செய்யப்பட்ட குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவருக்கு எதிராக குற்றம் சுமத்துவது தேவையற்றது. குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அதனை முன்வைக்க வேண்டும்.

இதன்போது குறித்த மருத்துவருக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் உதவிகளை மேற்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அசாத் சாலி, குறித்த மருத்துவர் தேர்தலில் போட்டியிட்டு பெருந்தொகையான வாக்குகளை வென்றவர் எனவும், அவரின் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் ரிஷாத் பதியூதீனினால் உதவிகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top