பாடசாலை அதிபரே மாணவியை
கொலை செய்ய உத்தரவிட்ட
கொடூரம்!
பாலியல்
துன்புறுத்தல் தொடர்பாக புகார் செய்தமையினால் பதின்மவயதுப் பெண் ஒருவர் உயிருடன்
எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பங்களாதேஷில் பதினாறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நஸ்ரத்
ஜஹான் ரஃபி என்ற 19 வயதுப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல்
மாதம் 6 ஆம் திகதி அன்று பங்களாதேஷில்
உள்ள பாடசாலையின் கூரை மீது வைக்கப்பட்ட தீயில் பலியானார்.
அந்தப்
பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் இடம்பெறுவதாக அவர் புகார் செய்து சில நாட்களின்
பின்னர் அவர் எரிக்கப்பட்டார்.
புகாரில்
பெயரிடப்பட்டவர்களில் ஒருவரான பாடசாலையின் அதிபரும் கைது செய்யப்பட்டவர்களில்
ஒருவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தன்மீதான
குற்றச்சாட்டை மீளப் பெற்றுக்கொள்ளாத காரணத்தால் சிறையில் இருந்தபடியே இந்தக்
கொலைக்காக பாடசாலை அதிபர் உத்தரவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.