1134 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்
மத்திய கல்வி அமைச்சு அனுமதி
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவிப்பு
கடந்த
சில மாதங்களாக
பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாணப்
பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் மீண்டும் 1134 பேருக்கு
விரைவில் ஆசிரியர்
நியமனம் வழங்க
மத்திய கல்வி
அமைச்சு அனுமதி
வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்
நஸீர் அஹமட்
தெரிவித்தார்.
கடந்த
வாரம் பட்டதாரி
ஆசிரியர்கள் 35 வயதுக்குட்பட்ட
355 பேருக்கு விண்ணப்பம்
கோரப்பட்ட நிலையில்
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாணக்
கல்வி அமைச்சர்
சி.தண்டாயுத
பாணி ஆகியோர்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க, ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கல்வி
அமைச்சர் அகிலவிராஜ்
காரியவசம் மற்றும்
சம்மந்தப்பட்டவர்களுடன் நடாத்திய
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும்
1134 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க இந்த அனுமதி
கிடைத்துள்ளன.
இதன்
பிரகாரம் தமிழ்
மொழியில் 823 பட்டதாரிகளும், சிங்கள மொழியில் 311 பட்டதாரிகளும்
விரைவில் நியமிக்கப்
படவுள்ளனர் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நஸீர்
அஹமட் இன்று
தெரிவித்தார் என முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment