வெள்ளி பதக்கம் வென்ற எத்தியோப்பிய வீரர்
ஃபெயிஸா லிலேஸா நாடு திரும்பாமல் மாயம்
ஒலிம்பிக்
மாரத்தானில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற பிறகு
தனது நாட்டு
அரசியல் அடக்குமுறைக்கு
எதிர்ப்பு தெரிவித்த
எத்தியோபிய வீரர் ஃபெயிஸா லிலேஸா நாடு
திரும்பாமல் மாயமாகியுள்ளார்.
தற்போதும்
ரியோவில் இருப்பதாக
நம்பப்படும் லிலேஸா, மாரத்தான் போட்டியில் பங்கேற்று
2-ஆவதாக வந்தார்.
பதக்கம் பெறும்
நிகழ்ச்சியின்போது, தனது நாட்டில்
நிகழும் அரசியல்
அடக்குமுறைக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அத்துடன்,
எத்தியோபியாவுக்கு திரும்பிச் செல்ல
அஞ்சுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே,
தனது கருத்துக்காக
லிலேஸா தண்டிக்கப்படமாட்டார்
என்று எத்தியோபியா
சார்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும், ரியோவில்
இருந்து திங்கள்கிழமை
நாடு திரும்பிய
எத்தியோபிய அணியினருடன் லிலேஸா வரவில்லை என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதக்கம்
வென்ற எத்தியோபிய
அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்த அந்நாட்டு விளையாட்டுத்துறை
அதிகாரிகள், லிலேஸா வெற்றியை குறிப்பிடவில்லை. மேலும், அவர் தொடர்பான கேள்விகளுக்கும்
பதிலளிக்க மறுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.