சீன தூதரகம் முன்பு குண்டு வெடிப்பு
ஒருவர் பலி; பலர் காயம்
கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு பெரும் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் சிக்கி பலர் உயிரிழந்ததிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட தகவலில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மூவர் காயத்திற்குள்ளாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிஸ்கேக் பகுதியில் சீன தூதரகம் உள்ளது. இங்கு வழக்கம் போல் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த கட்டம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து குண்டு வெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் சரியாக வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கார் சீன தூதரகம் மீது மோதும்படியா வந்ததும், ஆனால் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததால் கார் குண்டு வெளியே வெடித்ததாகவும் இதனால் தூதரக அதிகாரிகள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.