தேசிய தின உரையின்போது சிங்கப்பூர் பிரதமர்
லீ சியன் லூங் திடீர் மயக்கம்

தேசிய தின உரையாற்றிக் கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குக்கு (64)( Prime Minister Lee Hsien Loong )திடீர் மயக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரியவருவதாவது,
சிங்கப்பூர் தேசிய தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றினார்.
அந்த உரை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.அப்போது பிரதமருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் அந்த உரை தடைபட்டது.மயக்கத்தால் நிலைகுலைந்த அவரை மேடையிலிருந்தவர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மேடைக்கு வந்த லீ சியன் லூங், தனது உரையை நிறைவு செய்தார்.
"எனக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றி. நான் எல்லோரையும் பயமுறுத்திவிட்டேன்' என்று அப்போது அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இதயத் துடிப்பையும்,ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பிரதமருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top