நாளிதழ் அலுவலகத்தில்
பத்திரிகையாளர் குத்திக் கொலை!

இந்தியாவின் குஜராத்   மாநிலத்தில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் இருந்து வெளியாகும் ஒரு குஜராத்தி மொழி நாளிதழின் கிளை அலுவலகம் ஜுனகாத் மாவட்டத்தில் உள்ள வஞ்சாரி சவுக் பகுதியில் உள்ளது.
நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் இந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் அங்கிருந்த கிஷோர் தவே(53) என்பவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? என்ற கோணத்தில்  விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top