துருக்கி பொலிஸ் தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு
11அதிகாரிகள் பலி 78 பேர் காயம்
துருக்கியில் நாட்டில் உள்ள பொலிஸ் தலைமையகம் அருகே இன்று நடைபெற்ற
கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பொலிஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். சுமார் 78
பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து துருக்கி ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகளில் பொலிஸ் தலைமையகத்தின் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்து, சில கட்டிடங்கள் இன்னும் தீபற்றி எரிவது போல் காணப்படுகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சிஸ்ரே பகுதியை சேர்ந்த முக்கிய சாலைகளை மூடப்பட்டுள்ளன.
காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.