Great Tomorrow அமைப்பின்
"நமக்கான அரச சேவையாளர்களை நாமே உருவாக்குவோம் "
திட்டத்தின் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு.
எதிர்வரும்
காலங்களில் இலங்கையில் நடைபெற இருக்கின்ற கிராம
சேவகர், சமுர்த்தி
உத்தியோகத்தர் மற்றும் சட்டக் கல்லுரி அனுமதிக்கான
போட்டிப் பரீட்சைகளில்
தோற்ற இருக்கின்ற
மாணவர்களின் நன்மையினை கருத்தில் கொண்டு கல்முனை
"கிரேட் தொமொர்ரொவ்" Great Tomorrow அமைப்பினால் "நமக்கான
அரச சேவையாளர்களை
நாமே உருவாக்குவோம்
" திட்டத்தின் கீழ் இலவச
போட்டி பரீட்சை
வழிகாட்டல் கருத்தரங்கு
ஓன்று இன்று
27 ம் திகதி
சனிக் கிழமை
மு.ப9.00
மணி தொடக்கம்
பி.ப4.00
மணி வரை
சாய்ந்தமருது அல்- ஹிலால் மகா வித்தியாலயத்தில்
நடாத்தப்பட்டது.
இவ்
இலவசக் கருத்தரங்கில்
இலங்கை நிருவாக
சேவை உத்தியோகத்தர்
ஜி.எ.கே.எம்.
அபான் காரியப்பரினால் நடாத்தப்பட்ட
விரிவுரையில் சுமார் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள்
கலந்து கொண்டு
பயன்பெற்றனர் .
(ஏ ஆர்.
றுஹைம் றூமி - கல்முனை)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.