புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளவர்களை
கண்ணியப்படுத்திவழியனுப்பிவைத்த
கிழக்கு மாகாண முதலமைச்சர்
இவ்வருடம் மக்கா நகர் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிகளை கண்ணியப்படுத்தி வழியனுப்பிவைக்கும் நிகழ்வொன்றினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஹஜ் கடமைக்காக செல்லவிருக்கும் இவர்களை முதலமைச்சர் ஹாபிஸ்
நஸீர் அஹமட். அழைத்து இரவு விருந்துபசாரம் வழங்கி ஹஜ்ஜின்போது செய்ய வேண்டிய கருமங்கள் என்பன விபரிக்கப்பட்டு உரை நிகழ்த்தி, கட்டியணைத்து முகமன் (முஷாபகா) செய்து வழி அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.








0 comments:
Post a Comment