போலி 5000 நோட்டுடன் கைது செய்யப்பட்டவர்கள்
மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில்
போலி
5000 ரூபா நோட்டுக்களை
வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்த மூவரையும்
எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு மூதூர் நீதவான் எம். சம்ஸ்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த
29ம் திகதி
திருகோணமலையில் இருந்து காரில் பயணம்
செய்துகொண்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தங்கநகர், கிளிவெட்டி
பிரதேசத்தில் பெண்கள் நடத்தும் கடைகளில் இரண்டில்
ஐந்தாயிரம் ரூபா நோட்டை வழங்கி ஒரு
பைக்கற் சிகரெட்டும்
100 ரூபா டயலோக்
அட்டையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பின்னரே அந்த
ரூபா நோட்டுக்கள்
போலியானவை என்று
அடையாளங்காணப்பட்டுள்ளன.
மீண்டும்
திருகோணமலை நோக்கி குறித்த நபர்கள் செல்லும்
அடையாளங்கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அபுபக்கர்
மொஹொமட் சாஹுல்
ஹசன், ஜெயுலாப்தீன்
மொஹம்மட்
அன்வர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு
நீதிமன்றில் நிறுத்தப்பட்டதையடுத்தே மேற்படி
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.