24 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
ரூபா
29 இலட்சம் பெறுமதியான 24 கிலோ
(24.18kg) கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவினர்
தெரிவித்துள்ளனர்.
நேற்று
நள்ளிரவு கடந்து,
இன்று (30) 12.45 மணியளவில் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,
பேசாலை ஒளுதுடுவை
பகுதியில் வைத்து
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேசாலை,
திருதேப்பு பகுதியைச் சேர்ந்த 27, 24 வயதுடைய குறித்த
சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில்
பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த கஞ்சா
பொதியுடன் இவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை
இன்று (30) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான
மேலதிக விசாரணைகளை
பொலிஸ் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவினர்
மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.