கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரி
சிறைச்சாலையில்.தாக்குதலுக்கு இலக்கானார்
கண்டி
நிர்வாக மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம்
இடம்பெற்ற வன்முறைகள்
தொடர்பில் கைதுசெய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மகாசோன் பலகாய அமைப்பின்
தலைவர் அமித்
வீரசிங்க மீது
அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் சம்பவம்
ஒன்று இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம்
சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர்
ஒருவரே அமித்
வீரசிங்க மீது
தாக்குதல் நடத்தியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத்
தாக்குதலில் காயமடைந்த அமித் பொலிஸ் மற்றும்
சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அனுராதபுரம்
போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று
வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.