மறு
அறிவித்தல் வரை மூன்று மணி நேரத்திற்கு
முன்னர்
விமானநிலையம் வரவும்
சிறிலங்கன்
எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வரும்
அனைத்து பயணிகளும், புறப்படும் நேரத்திற்கு
மூன்று மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்
அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள
சட்டப்படி வேலை, தொழிற்சங்க
செயற்பாடு காரணமாக, பயணிகளுக்கு
ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாக குறித்த வேண்டுகோளை விடுப்பதாக சிறிலங்கன்
விமான சேவை நிறுவனம் குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல்,
மீள அறிவித்தல்
விடுக்கும் வரை குறித்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மூன்று கோரிக்கை தொடர்பில் அவர்கள் இவ்வாறு தொழிற்சங்க
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு - குடியகல்வு சேவை தொடர்பில் புதிய
அரசியலமைப்பொன்றை உருவாக்குதல், வெளிநாட்டு தூது குழு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளை
உள்ளிணைத்தல், குறித்த பிரிவு
தொடர்பில் ஏற்கனவே காணப்பட்ட வழக்கு தொடரும் பிரிவை மீண்டும் ஸ்தாபித்தல் ஆகிய
கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின்
தலைவர் அநுர கணுகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடுமுழுவதிலுமுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானநிலையம் உள்ளிட்ட அனைத்து
துறைமுகங்களிலும், இன்று (17)
நள்ளிரவு முதல் சட்டப்படி
வேலை தொழிற்சங்க நடவடிக்கையை பின்பற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.