அரசாங்கத்தில்
இருந்து வெளியேறுகிறார்
ஐதேக
நாடாளுமன்ற உறுப்பினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அரசாங்கத்தில் இருந்து விலகி, சுதந்திரமாகச் செயற்பட முடிவு செய்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவிடம், சமிந்த விஜேசிறி
இன்று கோரிக்கை விடுக்கவுள்ளார்.
சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ள அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை
முன்னெடுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின்
செயற்பாடுகளை தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.