ஆலையடிவேம்பு
பகுதியில் இளைஞர் ஒருவருக்கு
செருப்பு
மாலை அணிவிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைத்து
தாக்கிய
சம்பவத்தால் பதற்றமான சூழல்
மோட்டார்
சைக்கிளும் தீயிட்டு எரிப்பு
அக்கரைப்பற்றை அடுத்துள்ள ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞர் ஒருவரை அப்பகுதி
மக்கள் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து தாக்கிய சம்பவத்தால் அப்பிரதேசத்தில்
பதற்றமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடந்து
கொண்டார் என்று கூறியே அந்த இளைஞர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனக்
கூறப்படுகின்றது.
இதேவேளை தாக்கப்பட்ட குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளும் தீயிட்டு
எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில்
அவ்விட்த்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞரை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.