தந்தையும் மகனும் பரிதாபகமாக பலி
இன்று காலை இடம்பெற்ற சோகம்
மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபகமாக உயிரிழந்த சம்பவம் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாய் கிழக்கு பகுதியில் இன்று காலை
இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
56 வயதான ஜெகானந்தன், 29 வயதான சஞ்சீவன் ஆகிய தந்தையும் மகனுமே இவ்வாறு மின்சாரம் தாக்கி பரிதாபகமாக உயிரிழந்தவர்களாவர்.
தனது வீட்டில் இருந்த தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால்
கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த இவர்கள் முற்பட்டுள்ளனர். இதன்போது அதி உயர் மின்
அழுத்தம் இவர்களைத் தாக்கியதாலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.