நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை
மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு
பாடசாலைகள் நடத்துவது தொடர்பில்
தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம்
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிப்பு
தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய
காலநிலை மற்றும்
அனர்த்த நிலை
காரணமாக பாடசாலை
நடத்தவது , நடத்தாது இருப்பது தொடர்பான தீர்மானத்தை
மேற்கொள்ளும் அதிகாரம் மாகாண மற்றும் வலய
கல்வி பணிப்பாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அனர்த்த
நிலை காரணமாக
தற்போது நாட்டின்
பல பிரதேசங்களில்
பாடசாலையை நடத்துவதில்
தடைகள் இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளன.
மாணவர்களின்
பாதுகாப்பிற்காக துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வதன் அவசியத்தின்
அடிப்படையில் தான் இந்த அதிகாரத்தை மாகாண
மற்றும் வலய
கல்வி பணிப்பாளர்களுக்கு
வழங்க தீர்மானித்துள்ளதாக
கல்வி அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அனர்த்தம்
ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் அதிபர்களுக்கு
பாடசாலை தொடர்பான
நிலைமை குறித்து
மாகாண வலய
கல்வி பணிப்பாளர்களுக்கு
அறிவிப்பதை தொடர்ந்து தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம்
இதற்கமைவாக கிடைக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.