முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.
கலாசார விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த வேளையில், அரசாங்க வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்க, முன்னாள் காணி அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (24) அவரை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த போதும், அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் தினம் என்பதால், தன்னால் சமூகமளிக்க முடியாது என, தெரிவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அதற்கமைய இன்று (28) முற்பகல் 10.00 மணிக்கு, அவரை FCID யில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதற்கமைய அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.