சர்வதேச
தாதியர் தினத்தை முன்னிட்டு
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு
அமைச்சர்
ராஜிதவுக்கு விசேட விருது
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர்
சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (17)
முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
தாதியர் சேவையை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித
சேனாரத்னவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டி விசேட விருது ஒன்று சுகாதார
அமைச்சருக்கு ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
தாதியர் சேவையின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்களை பாராட்டி
விருதுகளும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. சுகாதார பிரதி அமைச்சர் பைசர்
காசிம், பாராளுமன்ற
உறுப்பினர் ஆசு மாரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க
ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.