வாகனங்கள்
வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி
வாகனங்களுக்கான புதிய வரி முறையினால், வாகனங்களின் விலைகள் இரட்டிப்பாகலாமென வாகன
வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜிஹான் பிலபிட்டிய எச்சரித்துள்ளார்.
கடந்த காலங்களில்,
வாகனங்களின் என்ஜின்
கொள்வனவை பொருத்தே அதற்கான வரி அறவிடப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டு
படிப்படியாக வரி அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகன விலைகளின்
அடிப்படையில் வாகனத்துக்கு வரிகள் அறவிடப்பட வேண்டும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான்,கொரியா மற்றும் இந்திய வாகனங்களின் விலைகள்
அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துக்கொண்டு வருவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.