சிங்களத் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை
தீபானி சில்வா பிணையில் விடுதலை;
அவரது சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து


வீதி விபத்து ஒன்று தொடர்பில், பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, பிரபல சிங்களத் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை தீபானி சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தீபானி சில்வா, இன்று பிற்பகல் (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டடார்.
அவரை இரண்டு இலட்ச ரூபா ரொக்கப் பிணையில் விடுவித்த நீதவான், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் உத்தரிவிட்டுள்ளார்.
இன்று (28) காலை பண்டாரகம பிரதேசத்தில் தீபானி ஓட்டிச் சென்ற கார் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டியினுள் அமர்ந்திருந்த 10 வயது சிறுமி இந்த அனர்த்தத்தில் கடும் காயங்களுக்கு உள்ளானதோடு, முச்சக்கர வண்டியும் சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமியின் வைத்திய செலவுகளுக்காக, உடனடியாக, 25,000 ரூபாவை வழங்குவதாக உறுதியளித்த தீபானி, அவர் குணமடைந்து வீடு திரும்பும் வரையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சேதமடைந்த முச்சக்கரவண்டியை திருத்தித் தருவதாகவும் தீபானி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top