கோத்தாபயவுக்காக கட்டுப்பணம் செலுத்த தயார்
சரத் பொன்சேகா தெரிவிப்பு


எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் போட்டியிட்டால், அவருக்காக கட்டுப்பணத்தை செலுத்த தான் தயார் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐதேக உறுப்பினர்கள் மாத்திரமன்றி, அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் கூட கோத்தாபய ராஜபக் குறித்து அச்சம் கொண்டுள்ளனர்.
ஏனென்றால், அவர் வெள்ளை வான் கடத்தல்கள், தாக்குதல்கள், பொதுச்சொத்துக்களை கொள்ளையிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டவர்.
கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றால், அவருக்காக கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top