அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரை
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
புத்தளம், மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பிரதேசங்களில்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு
நுளம்புகள் பெருகும் இடங்களை துப்பரவு செய்வதற்காக
அடுத்த மாதம்
7ம் திகதி
முதல் 8ம்
திகதி வரை
நாடளாவிய ரீதியில்
விசேட டெங்கு
ஒழிப்புத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார
அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கடந்த
சில வருடங்களுடன்
ஒப்பிடும் போது
இந்த வருடத்தின்
கடந்த காலப்பகுதிக்குள்
டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை குறைந்திருப்பதாக
தேசிய டெங்கு
ஒழிப்பு இயக்கம்
தெரிவித்துள்ளது.
இது
70 சதவீத வீழ்ச்சியாகும்
என அந்த
இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹசித திசேரா
தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த
சில தினங்களாகப்
பெய்த மழை
காரணமாக புத்தளம், மட்டக்களப்பு, கல்முனை ஆகிய
பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது
நாடு பூராகவும்
உள்ள வைத்தியசாலைகளில்
வாரத்திற்கு சுமார் 500 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும்
தேசிய டெங்கு
ஒழிப்பு இயக்கத்தின்
டொக்டர் திசேரா
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.